அறிவிப்பு
நாகர்கோவில் கடலில் கடற்குளித்த இருவர் அலையில் அகப்பட்டு அகாலமரணமானார்கள்.மிருசுவில் பகுதியைச்சேர்ந்த சுதன் (நாகர்கோவில் கிராமத்தில் கடந்தகால புகைப்பட பிடிப்பாளர்) என்பவரது மகனும், அதே இடத்தைச்சேர்ந்த அவரது நண்பனும் (20-25 வயது மதிக்கத்தக்கவர்கள்) நாகர்கோவில் கெளத்தந்துறை பிள்ளையார் ஆலயத்திற்கு அண்மித்த கடலில் குளித்தபோது அலை அடித்துச்சென்று அகாலமரணமானார்கள். இச்சம்பவம் 26.10.2015 இன்று காலை சுமார் 9:00 மணியளவில் நடைபெற்றுள்ளது. இருவரது உடல்கள் இன்று சுமார் 2:00 மணியளவில் கரைஒதுங்கியுள்ளது. மேலதிக தகவல்கள் பின்னர் இணைக்கப்படும்.........! Last Updated (Monday, 26 October 2015 09:45) |
சுவீஸ் வாழ் நாகர்கோவில் மக்கள் நண்பர்களுடன் இணைந்து நடாத்தும் ஒன்றுகூடலுக்கான அழைப்பு.சுவிஸ் வாழ் நாகர்கோவில் மக்கள் நடாத்தும் வருடாந்த ஒன்று கூடலும், கலை நிகழ்வும் இவ்வருடம் எதிர்வரும் 31.10.2015 சனிக்கிழமை அன்று மதியம் 12:30 மணியளவில் பாசல் மானிலத்தில் நடைபெறவுள்ளது.
நாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலய சமுத்திர தீர்த்த உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.நாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலயத்தில் 10ம்திருவிழா நாகர்கோவில் வடக்கு மக்களால் மிகவும் சிறப்பான முறையில் நடார்த்திவருவது வழமை ஆனால் இம்முறை ஆலயத்தின் தர்மகத்தாவினால் ஏற்பட்ட இடையூறுகள் தடங்கலாக உள்ளகாரணத்தினால் கடந்த 01.10.2015 அன்று 10ம் திருவிழாவினை வடக்கு மக்கள் மிக எளிமையான முறையில் மிகுந்த பக்திப்பரவசத்துடன் சமுத்திர தீர்த்த உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளது.
|
01.10.2015 இன்று உலக சிறுவர் தினம்/உலகமெங்கும் வாழும் சிறுவர்கள் தினமாகிய இன்று அனைவரும் செல்வங்களில் மிகச்சிறந்த மழலை செல்வங்களை வாழ்த்தி இவ்வையகத்தில் பல பட்டங்களை பெற்று பேரோடும் புகழோடும் வாழவேண்டும் என வாழ்த்துகின்றனர் நாகர்மணல் இணையம் பூர்வீக நாகதம்பிரான் ஆலய வருடாந்த உற்சவ 2015 8ம் நாள் வேட்டைத்திருவிழா.நாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலய வருடாந்த உற்சவம் கடந்த 22.09.2015 ஆரம்பமாகி சிறப்பான முறையில் விழாக்கள் நடைபெற்று வருகின்றது. 28.09.2015 திங்கட்கிழமை கப்பல் திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது, அதனைத்தொடர்ந்து 29.09.2015 செவ்வாய்கிழமை 8ம் உற்சவமான வேட்டைத்திருவிழா மத்தாப்பு வாணவேடிக்கையுடன் அடியவர்கள் புடைசூழ ஆரவாரத்துடன் நடைபெற்றுள்ளது. புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது. |
More Articles...
- பூர்வீக நாகதம்பிரான் ஆலய இடைக்கால நிர்வாகத்தினரின் திருவிழா உபயகார மோசடியினை அம்பலப்படுத்தியுள்ளார்கள் வடக்குமக்கள்.
- நாகர்கோவில் மகாவித்தியாலத்தில் பலியான மாணவர்களின் 20ம் ஆண்டு அஞ்சலியுடன் நினைவு தூபி திறப்புவிழா.
- பூர்வீக நாகதம்பிரான் ஆலய 10ம் திருவிழா உற்சவத்திற்கு புலம்பெயர் அடியவர்களிடம் நிதிகோரல்.
- நாகர்கோவில் மகாவித்தியாலயத்தில் 20ம் ஆண்டு நினைவு தூபி திறப்புவிழா.