2ம் இணைப்பு:- கடலுக்கு மீன்பிடிக்க சென்ற தந்தையும், மகனும் கடற்படையின் உதவியுடன் கரைதிரும்பியுள்ளார்கள்.

கடந்த 16.10.2017 அன்று மீன்பிடிப்பதற்காக கடலுக்குள்சென்ற தந்தையும், மகனும் 18.10.2017 அன்று தங்குகடல் தொழிலாளர்களினால் காப்பாற்றப்பட்டு இலங்கை கடற்படையின் உதவியுடன் கரைதிரும்பியுள்ளார்கள். இவர்கள் காலநிலை மாற்றத்தினை அவதானிக்காமல் காற்றின் எதிர்திசைக்கு படகினை செலுத்தி சர்வதேச கடற்பரப்பிற்கு சென்றபோது எரிபொருள் தீர்ந்துள்ளது.

 அதன்பின்னர் தங்குகடல் படகினர் அவதானித்து அவர்களை அணுகி அவர்களின் தொலைபேசியூடாக குடும்பத்தினருக்கும், இலங்கை கடற்படையினருக்கும் தகவல் வழங்கியதை அடுத்து தந்தையும், மகனும் கரைதிரும்பியுள்ளனர்.