நாகர்கோவில் வடக்கு அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலய வருடாந்த மணவாளக்கோல விழா எதிர்வரும் 13.07.2019 சனிக்கிழமை நடைபெறவுள்ளது.
அன்று காலை 09.00 மணியளவில் 1008 சங்குகளால் அபிசேகம் நடைபெற்று தொடர்ந்து பூஜை ஆராதனைகள் இடம்பெறும் , பின்னர் அடியவர்களுக்கு விபூதி பிரசாதத்துடன் அன்னதானமும் வழங்கப்படும் . இதனைத் தொடர்ந்து மாலை 07.00 மணியளவில் இரவு நிகழ்ச்சிகள் ஆரம்பமாகி அதிகாலை 04.00 மணியளவில் அலங்கார பூஜை நடைபெற்று எம்பெருமான் உள்வீதி , வெளி வீதி வலம்வந்து அடியவர்களுக்கு அருள் பாலிப்பார் . எனவே எம்பெருமான் மெய்யடியார்களே இவ்விழாவினை சிறப்புற நடார்த்துவதற்கு தங்களாலான நிதிப்பங்களிப்பினை வழங்கி எம்பெருமானின் திருவருளைப்பெற்றேகும் வண்ணம் கேட்டுக்கொள்கின்றனர்.
குறிப்பு :- இரவு நிகழ்ச்சிகளின் விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
Last Updated (Saturday, 22 June 2019 02:50)