அறிவிப்பு
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலயத்தில் திருவொம்பாவை பூஜைநாகர்கோவில் வடக்கு அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலயத்தில் திருவொம்பாவை பூஜை எதிர் வரும் 02.01.2017 திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது. அதிகாலை 4:30 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி பாரயணம் இசைத்து எம்பெருமானின் திருக்கதவு திறக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து அபிஷேக ஆரதனை நடைபெற்று தொடர்ந்து Last Updated (Saturday, 31 December 2016 02:50)
|
செல்வன். சத்தியமூர்த்தி கபாஸ்கர் 30.11.2016 அன்று Biomedical Science பட்டம்பெற்றுள்ளார்.நாகர்கோவில் வடக்கைச்சேர்ந்த செல்வன். சத்தியமூர்த்தி கபாஸ்கர் கடந்த 30.11.2016 புதன்கிழமை அன்று கொழும்பு மகிந்தராஜபக்ஷ்ச திரையரங்கில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் Biomedical Science ற்கான பட்டத்தினை பெற்றுள்ளார். பட்டம்பெற்ற கபாஸ்கர் என்பவரை எமது கிராமமக்கள் சார்பாக நாகர்மணல் இணையத்தினர் பாராட்டுவதுடன் இவர் மேலும் பலபல பட்டங்களினை பெற்று எமதுகிராமத்திற்கு பெருமை ஈட்டித்தரவேண்டுமென வாழ்த்துகின்றனர்.
நாகர்கோவில் தெற்கு தட்டார்தெரு முருகன் ஆலய அடிக்கல் நாட்டிவிழா.நாகர்கோவில் தெற்கு குடாரப்பு பகுதியில் அமைந்திரருந்த தட்டார்தெரு முருகன் ஆலயத்திற்கான அடிக்கல் நாட்டுவிழா 23.11.2016 புதன்கிழமை அன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இவ்வாலயம் நடைபெற்ற யுத்தத்தினால் முற்றாக சேதமடைந்து தற்போது குறித்த ஆலயம் புதிதாக அமைக்கும் நோக்குடனேயே அடிக்கல் நாட்டப்பட்டு ஆலய திருப்பணிவேலைகள் நடைபெறவிருக்கிறது. புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது
|
அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் நடைபெற்ற தெய்வயானை திருக்கல்யாண விழாநாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தனத்தில் நடைபெற்ற தெய்வயானையம்மன் திருக்கல்யாண வைபவம் சமய சம்பிரதாயங்களுக்கு அமைவாக மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்று. திருக்கல்யாண விருந்தில் அடியவர்கள் கலந்து களிப்புற்றது மட்டுமல்லாமல் முருகப்பெருமானின் பேரருளினையும் பெற்றேகினர்.புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது. அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் நடைபெற்ற சூரன்போர்நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் கந்தசஷ்டி விழாவின் இறுதி நிகழ்வாகிய சூரன்போர் நிகழ்வு அடியார்களால் மிகவும் சிறப்பானமுறையில் கொண்டாடப்பட்டது. முருகப்பெருமான் போர்க்குதிரையில் புறப்பட்டு சூரனை கொன்று அமரர்களுக்கு விடுதலை கொடுத்தும் இவ்விரதத்தினை அனுஷ்டித்த அடியவர்களுக்கும் அருள்பாலித்தருளிய காட்சி காண்போர்களை மெய்சிலிர்க வைத்துள்ளது. புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது. Last Updated (Tuesday, 08 November 2016 02:32) |