அறிவிப்பு
நாகர்மணல் இணையத்தள நேயர்களுக்கு....நீண்டகாலமாக எமது கிராமத்தின் விடயங்கள் தொடர்பான தகவல்களை இவ் இணையத்தளத்தில் இணைக்கமுடியாமையினையிட்டு மிகவும் மனவருத்தமடைகின்றேன். இனிவரும் காலங்களில் இப்படிப்பட்ட தவறுகள் வராமல் தொடர்ந்து செயல்ப்பட எத்தனித்துள்ளோம் ஆகவே எம் கிராமமுன்னேற்றத்தில் அக்கறையுள்ளவர்களே தாங்களும் பலவகையான தகவல்களினை எமக்கு எழுதி அனுப்பிவைத்து எமது கிராமத்தின் பெருமையினை உலகமெங்கும் வாழும் எம்கிராமத்தவர்க்கு அறிவிப்போமாக.
Last Updated (Friday, 24 September 2010 19:12) |
2010 நாகர்கோவில் நாகதம்பிரான் ஆலய வருடாந்த உற்சவம் ( படங்கள் இணைப்பு)நாகர்கோவில் பூர்வீகநாகதம்பிரான் ஆலய வருடாந்த உற்சவம் நீண்டகால இடைவெளியின் பின்னர் 2010 ஆம் ஆண்டு நடைபெறுகின்றது அவற்றில் 24.09.2010 இன்று கப்பல் திருவிழா நடைபெற்றது இதில் பல இடங்களில் இருந்து கூட்டமாக பக்தகோடிகள் திரண்டு வந்து எம்பெருமானின் திருவருள் பெற்றுள்ளார்கள். நாளை வேட்டைத்திருவிழாவும் மறுநாள் சப்பறத்திருவிழாவும் அதனைத்தொடர்ந்து 27.09.2010 திங்கட் கிழமை சமுத்திரதீர்த்தத்திருவிழாவும் நடைபெறவுள்ளன சிறப்பு நிகழ்வாக மங்களவாத்தியம் பிரபல வாத்தியக்கலைஞர் சதீஸ் குளுவினரின் நாதஸ்வரக்கச்சேரி இடம்பெறும் ஒலி ஒளி அமைப்பாளர் நாகர்கோவில் நாகேஸ்வரா சவுண்ட், ஒளிப்படப்பிடிப்பு நாகர்கோவில் நாகேஸ்வரா வீடியோ அன்ட் போட்டோ, சமுத்திர தீர்த்தோற்சவ திருவிழா புகைப்படங்களை புலம்பெயர்ந்து வாழும் நாகதம்பிரான் அடியார்கள் பார்வையிட்டு எம்பெருமானின் திருவருள் பெற்றுய்வீராகா........ புகைப்படங்களை பார்வையிட இங்கே அழுத்தவும், அல்லது புகைப்படங்கள் பக்கம் பார்க்கவும் Last Updated (Saturday, 02 October 2010 18:35) நாகர்கோவில் அம்மன் வைகாசிப்பொங்கல் புகைப்படங்கள்17.05.2010கடந்த 10 வருடங்களின் பின்னர் நாகர்கோவில் அம்மன் வைகாசிப்பொங்கல் 17.05.2010 மிகவும் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டன. நாகர்கோவில் வடக்கு மக்களின் காவட்டி நாகர்கோவில் முருகன் ஆலய அரசமரத்தடியில் ஆரம்பமான நிகழ்வின் புகைப்படங்கள் இங்கு இணைக்கப்பட்டுள்ளது. Last Updated (Tuesday, 25 May 2010 22:14) |
பல்கலைக்கழகம் சென்றமாணவியாழ் நாகர்கோவிலை பிறப்பிடமாகக்கொண்ட நடராஜா செல்வராஜ இவர் சாதரண குடும்பத்தைச்செர்ந்தவர். இவருக்கு இரண்டு பிள்ளைகள் ஒரு பெண் பிள்ளையும், ஒரு ஆண் பிள்ளையும் முதல் பிள்ளை பெண் பிள்ளை செல்வராஜ அமுதா இவர் தனது குடும்பநிலமையினை புரிந்துகொண்டு தனது படிப்பினை யாழ் நாகர்கோவில் மகாவித்தியாலயத்தில் படித்துவந்தார் 1995ம் ஆண்டு இலங்கை இராணுவத்தினரால் நடாத்தப்பட்ட புக்காரா குண்டுவீச்சினால் 22 மாணட்ர்கள் கொல்லப்பட்ட்;துடன் பல மாணவர்கள் படுகாயமடந்துள்ளனர். காயமடைந்த மாணவர்களில் ஒருவரான செல்வராஜா அமுதாவும் அடங்குவர். தொடர்ந்து தனது படிப்பினை மேற்கொண்டு பல இன்னல்களின் மத்தியிலும் விடாமுயர்ச்சியினாலும் 28.03.2010 யாழ் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றுள்ளார் இவர் பெற்றுள்ள பட்டம் எமது கிராமத்து மக்களுக்கும் எமதுகிராமத்துக்கும் மிகவும் பெருமௌயாகும். எமது மக்களின் சார்பாக நாகர்மணல்.கொம் அமுதா மென்மேலும் இன்னும்பல பட்டம் பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்துகின்றனர் மேலதிக விபரம் தொடரும்.......... வடமராட்சி மக்ககளை மீளக்குடியேற அரசாங்கம் அறிவிப்புவடமராட்சி கிழக்கு மக்களை தங்களது சொந்த இடங்களுக்கு சென்று மீளக்குடியேறுமாறு இலங்கை அரசாங்கம் அறிவித்ததன் பயனாக வடமராட்சி மக்கள் மிகுந்த சந்தோசத்துடன் தங்களது சொந்த இடங்களுக்கு போவதற்காக உள்ளார்கள். Last Updated (Saturday, 13 March 2010 16:32) |