நாகர்கோவிலைச்சேர்ந்த திருமதி தவச்செல்வி விமலதாசன் 02.01.2010 இன்று காலமானார்
நாகர்கோவிலை பிறப்பிடமாகவும் கற்கோவளம் புனிதநகரை வதிவிடமாகக்கொண்ட திருமதி தவச்செல்வி விமலதாசன் (தீபா) மண்ணெண்ணை ஊற்றி பற்றவைத்து தற்கொலைமுயற்யில் ஈடுபட்டவேளையில் உறவினர்களால் தடுத்து நிறுத்தி அருகிலுள்ள மந்திகை வைத்தியசாலைக்கு கொண்டுசென்று சிகிச்சையளித்து மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச்சென்று சிகிச்சையளிதபோதும் சிகிச்சைபயனளிக்காது 02.01.2010 சனிக்கிழமை யாழ் போதனாவைத்தியசாலையில் அகாலமரணமானார்.
இவர் இராசேந்திரம் பொன்னுக்கிளியின் அன்பு மகளும், திரவியம் அமராவதியினரின் அன்புப்பேத்தியுமாவார்.இவரின் சகோதரர்களின் விபரம் பின்னர் அறிவிக்கப்படும்
நாகர்மணல்.கொம் இவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபத்தினை தெரிவித்து அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்.