2ம் இணைப்பு...மரண அறிவித்தல்:- முத்தையா பத்மநாதன் 05.02.2017 ஞாயிற்றுக்கிழமை அன்று

நாகர்கோவில் வடக்கை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட முத்தையா பத்மநாதன் (சிவகுரு) 05.02.2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மந்திகை ஆதார வைத்தியசாலையில் காலமானார். உடலில் ஏற்பட்ட சுகயீனம் காரணமாக 04.02.2017 அன்று வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின்னர் சிகிச்சை பலனின்றி காலமானார்.

அன்னார் முத்தையா தங்கச்சியம்மா தம்பதிகளின் அன்பு மகனும்
விஜயலட்சுமி பத்மநாதன் (சேது) என்பவரின் அன்புக்கணவரும்,
சிவாசினி, கருணாநிதி, திலகவதி, ஐங்கரன், ராகினி, சிந்துராஜ்,சியந்தன், சுவித்தா ஆகியோரின் பாசமிகு தந்தையும்.
சதீஸ்குமார், வனிதா, சிவானந்தன், அஜிதா, திருவருட்செல்வன், அகிந்தனா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்

இறுதிக்கிரியை :-  06.02.2017 இன்று பிரேதபரிசோதனை முடிவுற்றதும் அன்னாரது பூதவுடல் அவரது இல்லத்திற்கு எடுத்துச்சென்று இறுதி அஞ்சலிகள் நடைபெற்று பின்னர் நாகர்கோவில் கிழக்கு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படவுள்ளது.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் எமது கிராம மக்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றனர்.

அன்னாரது பிரிவினால் துயருற்றிருக்கும் குடும்பத்தாருக்கு நாகர்மணல் இணையத்தளம் எமது கிராம மக்கள் சார்பாக ஆழ்ந்த அனுதாபத்தினை தெரிவிப்பதுடன் அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றது. 

 துயர்பகிர்ந்துகொள்ள.

ஐங்கரன் மகன்
0094775173572

Last Updated (Monday, 06 February 2017 02:39)