கெளத்தந்துறை பிள்ளையார் ஆலயத்தில் புதிய மண்டபத்திற்கு அடிக்கல் 22.11.2015 அன்று நாட்டப்பட்டது.

நாகர்கோவில் வடக்கு கெளத்தந்துறை பிள்ளயார் ஆலயத்தில் வசந்தமண்டபத்தின் வடக்கு பக்கமாக சுமார் 45அடி சுற்றுக்கொட்டகைக்கான மண்டபம் அமைப்பதற்கு ஆரம்ப வேலைக்காக 22.11.2015 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை அடிக்கல் நாட்டப்பட்டது.

 இக்கட்டுமானப்பணிக்கான நிதிப்பங்களிப்பினை நாகர்கோவில் மேற்கை சேர்ந்தவரும் புலம்பெயர்ந்த நாட்டில் வசிப்பவருமாகிய தளையசிங்கம் ரவிக்குமார் அவர்கள் பொறுப்பேற்றுள்ளார்.

இக்கட்டுமானப்பணிக்கான உத்தேச மதிப்பீடு சுமார் 800 000 (எட்டு லட்சம் ரூபா) இக்கட்டுமானப்பணியினை இவ்வாலயத்தினை முன்னரே அமைத்துத்தந்த சிற்பாசாரியாரியாரான ரவி அவர்களே பொறுப்பேற்றுள்ளார்.

 

Last Updated (Monday, 23 November 2015 02:17)