லண்டன் மாநகரில் B.S.C. (Computer Science) பட்டம்பெற்ற நாகர்கோவில் மாணவி மேரிநிரோஷனா.

நாகர்கோவில் கிராமத்தைச்சேர்ந்தவரும், லண்டன் மாநகரில் வசித்து வருபவருமாகிய நவீனநாயகம் மேரிநிரோஷனா எனும்  மாணவி கடந்த 25.11.2014 வெம்பிலி மண்டபத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு நிகழ்வில் B.S.C. (Computer Science) பட்டம் பெற்றுள்ளார். புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது

இலங்கை  மாணவியாக நாகர்கோவில் நகரைச்சேர்ந்த ஒருவர் மட்டும் கலந்துகொண்டு பட்டம்பெற்று எமது நாட்டுக்கும், கிராமத்திற்கும் பெருமையீட்டுத்தந்துள்ளார்.

இவரது கல்விப்பாதையில் மேலும் பல வெற்றிகளை ஈட்டவேண்டுவதோடு நாகர்கோவில் கிராம மக்கள் மிகுந்த பாராட்டுக்களையும் தெரிவிக்கின்றனர். அத்துடன் இத்தகைய தகவ்லினை பிரசுரிப்பதையிட்டு நாகர்மணல்.கொம் மகிழ்ச்சியடைவதோடு. பட்டம் பெற்று எமதுகிராமத்திற்கு பெருமயீட்டிய செல்வி மேரிநிரோஷனா நவீனநாயகம் அவர்களை பாராட்டி வாழ்த்துகின்றது.