காணாமல்போன கலியுகமூர்த்தி சுகந்தி 24.10.2014 இன்று சடலமாக மீட்கப்பட்டது

கடந்த 20ஆம் திகதி காணாமற்போன எமது கிராமத்தைச்சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயான கலியுகமூர்த்தி சுகந்தி (வயது 36) என்பவர் வடமராட்சி முள்ளி பகுதியிலுள்ள பற்றைக்குள் இருந்து இன்று காலை 8.30 மணியளவில் உருக்குலைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

 இன்றைய தினம் விறகு வெட்டுவதற்காகச் சென்ற சிலர் முள்ளி பகுதியிலுள்ள பற்றைக்குள் இருந்த பெண்ணின் சடலத்தைக்கண்டு நெல்லியடி பொலிஸாருக்கு தெரிவித்ததையடுத்து அங்கு வந்த பொலிஸார் சடலத்தை மீட்டதுடன் விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.  

கொலைசெய்யப்பட சுகந்தி சிவலிங்கம் (சின்னமணி) என்பவரின் பாசமிகு மகளாகும்.

இவரது கொடுமையான கொலையினால் தீராத்துயருடன் வாடும் குடுமத்தினருக்கு நாகர்மணல்.கொம் எம்கிராம மக்கள் சார்பாக ஆழ்ந்த அனுதாபத்தினை தெரிவிக்கின்றது. 

 

மேலதிக விபரங்கள் பின்னர் இணைக்கப்படும் ........ 

Last Updated (Saturday, 25 October 2014 19:32)