01.09.2014 இன்று நாகர்கோவில் கண்ணகை அம்மன் ஆலயத்திற்கு ஒலிபெருக்கி அன்பளிப்பு செய்த பக்தர்.

நாகர்கோவில் கண்ணகை அம்மன் ஆலய கும்பாபிஷேகத்திற்காக லண்டனில் இருந்து வருகைதந்த அடியவர் நாகமுத்து குமாரவேலு (சிறி) என்பவர் 01.09.2014 திங்கட்கிழமை இன்று ஆலயத்திற்கு ஒலிபெருக்கி உபகரணங்களை அன்பளிப்பு செய்துள்ளார். 

இன்று முதல்நாளாக மண்டலாபிஷேகம் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில் இவ்வன்பளிப்பு வழங்கப்பட்டதினால்  அடியவர்கள் ஆரவாரத்துடன் அம்பாளின் மண்டலாபிசேக நிகழ்வினை கண்டுகளித்தனர்.

அன்பளிப்பு வழங்கிய திரு குமாரவேலு அவர்களுக்கு ஆலய தர்மகத்தா நன்றியினை தெரிவித்ததுடன் அம்பாளின் அருட்பிரசாதமும் வழங்கி கெளரவித்துள்ளார்.

 

Last Updated (Monday, 01 September 2014 12:33)