நாகர்கோவில் கண்ணகை அம்மன் ஆலய கும்பாபிஷேக விழா நடைபெற திருவருள் கைகூடியுள்ளது

நாகர்கோவில் கண்ணகை அம்மன் தேவஸ்தான மகாகும்பாபிஷேகம் எதிர்வரும்  ஜயவருடம் ஆவணிமாதம் 15ம் நாள் (31.08.2014) ஞாயிற்றுக்கிழமை காலை 7:17 மணிமுதல் 09:03 மணிவரையுள்ள ஷஷ்டி திதியும், சுவாதி நடசத்திரமும், கன்னி லக்கினமும், கூடிய சுபமுகூர்த்தவேளையில் நடைபெற திருவருள் கைகூடியுள்ளது.

இவ் அறிவித்தலை உலகமெங்கும் வாழும் நாகர்கோவில் கண்ணைகை அம்பாள் அடியவர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம். அம்பாளின் திருப்பணிவேலைகள் மிகமிக துரிதகதியில் நடைபெற்றுவருகின்றது இத்திருப்பணி வேலைகளுக்கும், மகாகும்பாபிஷேக விழாவிற்கும் நிதிப்பங்களிப்பினை வழங்கும் அடியவர்கள் கீழே குறிப்பிடப்பட்ட வங்கிக்கணக்கில் வைப்பிலிட்டு அதற்கான பெயர்விபரங்களை சமர்ப்பித்து ஆலய பற்றுச்சீட்டினை பெற்று கண்ணகை அம்மனின் திருவருளினை பெற்றுய்யுமாறு வேண்டுகின்றோம்.

ஆலய வங்கிக்கணக்கு விபரம்.

கொமெர்சல் வங்கி

கணக்கு இல:- 8600930332

V.பத்மநாதன் (0094 77 758 9873)

நாகர்கோவில் கண்ணகை அம்மன் தேவஸ்தானம்.

மேலதிக விபரங்கள் உரிய காலத்தில் அறிவிக்கப்படும்...........!

தகவல்:- வ.பத்மநாதன் (ஆலயதர்மகத்தா)

Last Updated (Friday, 27 June 2014 15:01)