நாகர்கோவில் கிழக்கு தமிழ் ஒளி விளையாட்டுக்கழகம்

தமிழ் ஒளி விளையாட்டுக்கழகம் புனரமைக்கப்பட்டுள்ளது. கடந்த சில காலங்களாக போரட்ட சூழ்நிலமையினால் தமிழ் ஒளி விளையாட்டுக்கழகம் இயங்காமல் போனது தற்பொழுது புதியநிர்வாகத்துடன் மீண்டும் புதிதாய் உருவெடுத்துள்ளது.

அதன்பயனாக கடந்த 18.03.2011 அன்று பொதுக்கூட்டம் கூட்டி அனைத்து அங்கத்தவர்கள் மத்தியில் புதிய நிர்வாகத்தெரிவுகள் இடம்பெற்றன  இத்தெரிவுகளில் தெரிவுசெய்யப்பட்டவர்கள் வரிசையில்.

  • தலைவர்:- சிங்கராசா புஸ்பராசா
  • உ.தலைவர்::  பாலசுப்பிரமணியம் ஜெகநாதன்
  • செயலாளர்:: குணரட்னம் கீர்த்தன்
  • பொருளாளர்:: கணேஸ் விஜயகுமார்

நிர்வாக உறுப்பினர்களாக

  1. அழகராசா அன்ரனிஜெயராஜ்
  2. தங்கராசா குலவீரசிங்கம்
  3. திருச்செல்வன் செல்வகாந்தன்

விளையாட்டுத்தலைவராக

பாலசுப்பிரமணியம் மேகநாதன் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்கள். அதனைத்தொடர்ந்து இவ்விளையாட்டுக்கழக வீரர்கள் விளையாட்டுக்கழக சீருடையினை அணிந்து தமிழ் ஒளி விளையாட்டுக்கழக உதைபந்தாட்ட  Aஅணியும் Bஅணியும் இணைந்து உதைபந்தட்டம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து இன்பர்சிட்டி காண்டீபன் விளையாட்டுக்கழகமும் தமிழ் ஒளி விளையாட்டுக்கழகமும் இணைந்து இன்பர்சிட்டியில் காண்டீபன் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றது. இதன் புகைபடங்கள் பின்னர் இணைக்கப்படும்.

                                            தகவல்::  தமிழ் ஒளி வி.க. தலைவர்

Last Updated (Friday, 03 June 2011 20:32)