நாகர்கோவில் வரலாற்று சிறப்புமிக்க பூர்வீக நாகதம்பிரான் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் கடந்த 19.09.2018 புதன்கிழமை ஆரம்பமாகி மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. எதிர்வரும் 25.09.2018 செவ்வாய் கிழமை 7ம் உற்சவம் கப்பல்திருவிழா, அதனைத்தொடர்ந்து 10ம் நாள் 28.09.2018 வெள்ளிக்கிழமை தீர்த்தோற்சவ பெருவிழாவினை தென் இந்திய கலைஞர்களுடன் இணைந்த இசை நிகழ்சி நடைபெற விழா உபயகாரர்கள் ஏற்பாடுசெய்துள்ளனர்.