அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலயத்தில் மணவாளக்கோல உற்சவம்.

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான ஆலயத்தில் எதிர்வரும் 18.06.2016 சனிக்கிழமை அன்று முதலாவது கும்பாபிஷேக தினம் வெகு விமர்சஜாக நடைபெறவுள்ளது.

அன்றயதினம் மூலமூர்த்தியாகிய நாகதம்பிரானுக்கும், ஏனைய பரிவார மூர்த்திகளுக்கும் 1008 சங்குகளால் சங்காபிஷேகம் நடைபெறும். அதனைத்தொடர்ந்து விஷேட பூஜைகளுடன் அன்னதான நிகழ்வும் நடைபெற்றுவதுடன் பகல் நிகழ்வுகள் நிறைவுபெறும்.

அதனைத்தொடர்ந்து மாலை 7:00 மணியளவில் இரவு நிகழ்சிகள் ஆரம்பமாகி அதிகாலை 4:00 மணியளவில் வசந்த மணடப பூஜை நடைபெற்று அலங்கரிக்கப்பட்ட முத்துச்சப்பறத்தில் எம்பெருமான் வீதி உலா எழுந்தருள்வார்.

 இரவு நிகழ்வுகளினை பொறுப்பேற்க விரும்பும் அடியவர்கள் ஆலய நிர்வாகத்தினருடன் தொடர்புகொள்ளுமாறு மிகவும் பணிவன்புடன் வேண்டுகின்றார்கள்.

இரவு நிகழ்ச்சி விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.......

இவ்விழாவிற்கு எம்பெருமான் அடியவர்கள் தங்களாலான நிதியுதவியினை வழங்கி எம்பெருமானின் திருவருளைப்பெற்று உய்யுமாறு பணிவன்புடன் வேண்டுகின்றோம்.

 தொடர்புகளுக்கு

தலைவர் :-0041 764831712 செகராசா அருந்தவச்செல்வன் 

பொருளாளர்:- 0094776357517 முருகேசு சிவஞானசுந்தரம் 

Last Updated (Monday, 06 June 2016 03:30)