அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலய மகா கும்பாபிஷேகம் 29.06.2015 திங்கட்கிழமை நடைபெறவுள்ளது.

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலய மகா கும்பாபிஷேகம் எதிர்வரும் ஆனிமாதம் 14ம் நாள் (29.06.2015) திங்கட்கிழமை அதிகாலை நடைபெறவுள்ளது. அதற்கு முன்னர் 27.06.2015 காலை 9:00 மணிமுதல் 28.06.2015 நண்பகல் 12:00 மணிவரையில் அடியவர்கள் எண்ணெய் காப்பு சாத்தும் நிகழ்வு இடம்பெறும் என்பதனை அடியார் பெருமக்களுக்கு அறியத்தருகின்றனர்.

கும்பாபிஷேகத்தினைத் தொடர்ந்து 45 நாட்கள் மண்டலாபிஷேக பூஜைகள் நடைபெற்று 12.08.2015 புதன்கிழமை 1008 சங்காபிஷேகத்துடன் அலங்கார பூஜை நடைபெற்று எம்பெருமான் உள்வீதி வெளிவீதி வலம்வந்து அடியார் பெருமக்களுக்கு அருள்பாலித்தருள்வார்.

எம்பெருமான் மெய்யடியார்களே........ நடைபெறவிருக்கு கும்பாபிஷேக நிகழ்விற்கும், அதனைத்தொடர்ந்து நடைபெறவிருக்கு மண்டலாபிஷேக பூஜைகளிற்கும் உங்களால் இயன்ற பூஜைப்பொருட்கள் வழங்கி கிரியைகாலங்களின் தங்களின் சிவதொண்டினையும் வழங்குமாறு மிகவும் பக்திபூர்வமாக வேண்டிநிற்கின்றோம்.

தகவல் :- நிர்வாகம் (அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலயம்)

Last Updated (Friday, 26 June 2015 09:36)