அறிவிப்பு
அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலயத்தில் 18.02.2016 அன்று பீம ஏகாதசி விரதம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.நாகர்கோவில் வடக்கு அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலயத்தில் கடந்த இருபது ஆண்டுகளுக்கு பின்னர் இந்த வருடம் பீம ஏகதசி விரதம் வழமைபோன்று மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது. அடியவர்கள் வளந்து பொங்கல் பொங்கி தங்களது வேண்டுதலை நிறைவேற்றி நல்லருளை பெற்றேகினர்.புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளது
|
22.02.2016 அன்று மாசிமகம் மாமாங்க தீர்த்தம் எமது கிராமத்தில் பிரதான ஆலயங்களில் மிகவும் சிறப்பாகவும், ஆரவாரத்துடனும் நடைபெற்றது.பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கூடிவரும் மாசிமகமாகிய இத்திதியில் மாமாங்கதீர்த்தம் இந்துசமுத்திரத்தில் நடைபெறுவது வழக்கம். அந்த தினமாகிய நாள் கடந்த 22.02.2016 ஞாயிற்றுக்கிழமை எமது கிராமத்தில் உள்ள பிரதான ஆலயங்களாக விழங்கும் பூர்வீக நாகதம்பிரான் ஆலயம், கெளத்தந்துறை பிள்ளையார் ஆலயம், அருள்மிகு முருகையா ஆலயம், அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலயம், கண்ணகை அம்மன் ஆலயம் ஆகிய ஆலயங்களில். புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளது. Last Updated (Saturday, 27 February 2016 05:12)
யா/நாகர்கோவில் மகாவித்தியாலய வருடாந்த இல்லமெய்வன்மைப் போட்டி மிகவும் சிறப்பாக நடைபெற்றது.யா/நாகர்கோவில் மகாவித்தியாலயத்தில் வருடாந்த இல்ல மெய்வனமைப்போட்டி 03.02.2016 புதன்கிழமை அன்று மதியம் 1:30 மணியளவில் முதன்முறையாக பாண்ட் அணியுடன் விழா ஆரம்பமாகியது. இவ்விழாவிற்கு பிரதம விருந்தினராக திரு க.கனகேஸ்வரன் (வடமராட்சி கிழக்கு உதவி அரசாங்க அதிபர்) சிறப்பு விருந்தினராக திரு ச.திரவியராசா (கோட்டக்கல்வி பணிப்பாளர் மருதங்கேணி) கலந்துகொண்டு சிறப்பித்துள்ளார்கள். புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளது. Last Updated (Saturday, 06 February 2016 10:25)
|
20.01.2016 புதன்கிழமை திருவிளம் போடப்பட்டு, இவ்வாண்டு பிரதிந்திகள் தெரிவு செய்யப்பட்டன, 23.01.2016 நாட்தொழில் ஆரம்பம்.நாகர்கோவில் வட்க்கு மக்களால் தொன்றுதொட்டு கடைப்பிடிக்கப்பட்டு வருகின்ற பாரம்பரியங்களில் மிகவும் சுவாரசியமான விடயம், நாட்சீட்டு போட்டு கடற்றொழிலாளர்கள் ஒன்றாக இணைந்து தமது மீன்பிடித்தொழிலினை ஆரம்பிக்கும் நாளே வடக்கு மக்களின் மிகச்சிறாந்த விழாவாகும். Last Updated (Friday, 22 January 2016 03:25)
எம்மினிய வாசகர்களுக்கு இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்.உலகமெங்கும் பரவி வாழும் எமது இணையத்தள வாசகர்கள் மற்றும் அன்பர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள். உங்கள் இல்லங்கள் தோறும் இன்பங்கள் என்றென்றும் பொங்கி சிறப்போடு வாழவேண்டுமென்று தைப்பொங்கல் திருநாளில் எல்லோரும் இணைந்து இன்பமாய் இவ்வய்யகத்தில் வாழ்வோமாக என்று நாகர்மணல் இணைய முகவர்கள் வாழ்த்துகின்றனர். |
More Articles...