அறிவிப்பு
மாணிக்கப்பிள்ளையார் தேவஸ்தான திருப்பணிக்கான வரவு விபரங்கள்.நாகர்கோவில் வடக்கு சிறி மாணிக்கப்பிள்ளையார் தேவஸ்தான திருப்பணி வேலைகளுக்கு இதுவரையில் நிதி பங்களிப்பினை வழங்கிய அடியவர்களின் பெயர் விபரங்கள் ஆலய நிர்வாகத்தினரால் வெளியிடப்பட்டுள்ளது. Last Updated (Friday, 10 June 2016 05:49)
|
17.02.2016 அன்று சிவபதமடைந்த சீதாலட்ஷ்மி குணசீலராசா அவர்களின் 31ம் நினைவு நாள் 18.03.2016.நாகர்கோவில் வடக்கைச்சேர்ந்த சீதாலட்ஷ்மி குணசீலராசா அவர்களின் 31ம் நினைவுநாள் 18.03.2016 வெள்ளிக்கிழமை அன்று காலை கீரிமலை மடத்தில் கிரியைகள் நடைபெற்று மதியம் சுமார் 11.30 மணியளவில் கற்கோவளம் திருமால்புரம் அவரது இல்லத்தில் ஆத்மசாந்திப்பிரார்த்தனைகள் நடைபெற்று அதனைத்தொடர்ந்து நடைபெறும் விருந்துபசாரத்திலும் கலந்துகொள்ளுமாறு ஆனைவரையும் அழக்கின்றோம்.
09.03.2016 அன்று சமாதன நீதவானாக எமது கிராமத்தை சேர்ந்தவர்கள் இருவர் பதவி ஏற்பு.நாகர்கோவில் வடக்கைச்சேர்ந்த சிவப்பிரகாசம் சிவாயநம (வடமராட்சி கிழக்கு சமுர்த்தி வங்கி உதவி முகாமையாளர்) என்பவரும், நாகர்கோவில் தெற்கைச்சேர்ந்த அப்பாபிள்ளை நடராசா (ஓய்வுபெற்ற நகரசபை செயலாளர் பருத்தித்துறை) என்பவரும் கடந்த 09.03.2016 அன்று பருத்தித்துறை நீதிமன்றத்தில் தகுந்த ஆலோசனைகளுடனும் சத்தியப்பிராமணம் செய்யப்பட்டு சமாதான நீதவானாக பதவிப்பிரமானம் ஏற்றுக்கொண்டனர். இவர்களை நாகர்கோவில் மக்கள் சார்பாக நாகர்மணல்.கொம் பாரட்டுக்களை தெரிவிக்கிறனர். புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது. Last Updated (Thursday, 17 March 2016 10:44) |
பள்ளிக்கூட வைரவர் ஆலயத்திற்கு மணிக்கோபுரம் புதிதாக அமைத்து 10.02.2016 அன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.நாகர்கோவில் வடக்கு பள்ளிக்கூட வைரவர் ஆலயத்திற்கு புதிதாக மணிக்கோபுரம் ஒன்றினை அமைத்து கடந்த 10.02.2016 புதன்கிழமை அன்று மணிக்கோபுரத்திற்கான கும்பாபிஷேகத்தினையும் சிறப்பான முறையில் நடைபெற்றது. புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளது Last Updated (Wednesday, 02 March 2016 08:50)
மகாசிவராத்திரி விழாவிற்கு அடியவர்கள் அனைவரும் நிதிப்பங்களிப்பினை வழங்கி உபயகாரர்கள் ஆகுமாறு வேண்டுகின்றோம்,நாகர்கோவில் வடக்கு அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலயத்தில் எதிர்வரும் 07.03.2016 மகாசிவராத்திரி விழா மிகவும் சிறப்பான முறையில் கொண்டாடப்படவுள்ளது. இவ்விழாவானது அனைத்து அடியவர்களின் நிதிப்பங்களிப்பினிலேதான் நடைபெறுவது வழக்கம். ஆகவே எம்பெருமான் அடியவர்கள் அனைவரையும் தங்களால் இயன்ற சிறுதொகை பணத்தினை வழங்கி மகாசிவராத்திரி விழாவினை சிறப்பித்து நீங்களும் உபயகாரர்கள் ஆகி எம்பெருமானின் பேரருளினை பெற்றேகுமாறு வேண்டுகின்றோம். நிர்வாகம், அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் |
More Articles...
- அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலயத்தில் 18.02.2016 அன்று பீம ஏகாதசி விரதம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
- 22.02.2016 அன்று மாசிமகம் மாமாங்க தீர்த்தம் எமது கிராமத்தில் பிரதான ஆலயங்களில் மிகவும் சிறப்பாகவும், ஆரவாரத்துடனும் நடைபெற்றது.
- யா/நாகர்கோவில் மகாவித்தியாலய வருடாந்த இல்லமெய்வன்மைப் போட்டி மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
- 20.01.2016 புதன்கிழமை திருவிளம் போடப்பட்டு, இவ்வாண்டு பிரதிந்திகள் தெரிவு செய்யப்பட்டன, 23.01.2016 நாட்தொழில் ஆரம்பம்.