அறிவிப்பு
நாகத்தொடுவாய்கான தற்காலிக பாலம் அமைத்தல்.நீண்டகாலமாக நாகத்தொடுவாயினை கடந்து பல்வேறு தேவைகளுக்கும் கடற்கரைக்கு செல்வதற்கு பெரும் சிரமத்தின் மத்தியில் சென்றுவரவேண்டியுள்ளது. பலதடவைகள் இது தொடர்பான கோரிக்கைகள் உரியவர்களிடம் முன் வைக்கப்பட்டபோதும் இதுவரை குறித்த பாலம் அமைப்பதற்கான திட்டங்கள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.
|
வடக்கு மக்களிடம் இருந்து சூத்திரதாரர்களினால் பறிக்கப்பட்ட பூர்வீக நாகதம்பிரான்! ஆலயம்...நடந்தது என்ன?. அன்பர்கள் முகப்புத்தகத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்கள்...நாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலயம் கடந்த 45 வருடங்களுக்கு முன்னர் வடக்குமக்களை கடற்றொழிலாளர்கள் என்ற பாகுபாடு பார்க்கப்பட்டு ஒதுக்கிவைத்ததன் பொருட்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு TR-105 நம்பிக்கைச்சொத்து மோசடி என்ற தலைப்பில் வழக்காடப்பட்டு நீதிமன்றத்தினால் ஒரு விதிமுறை (யாப்பு) அமைக்கப்பட்டு அதன் அடிப்படையில் ஆலயத்தில் எல்லா மக்களாலும் திறம்பட 2000ம் ஆண்டுவரை வழிபாடு நடாத்தப்பட்டு வந்தது. அதன்பின்னர் 2000ம் ஆண்டு எமது கிராமத்தை விட்டு ஒட்டுமொத்த மக்களும் நடைபெற்ற யுத்தம் காரணமாக வெளியேற்றப்பட்டனர். Last Updated (Sunday, 30 July 2017 14:22)
05.07.2017 அன்று நாகர்கோவில் வடக்கு அருள்மிகு ஐயனார் ஆலயத்திற்கான அடிக்கல் நாட்டு வைபவம்.நாகர்கோவில் வடக்கு மேற்கு கிராமசேவையாளர் பிரிவிற்குட்பட்ட காட்டுப்பகுதியில் வழிபட்டுவந்த ஐயனார் ஆலயம். நடைபெற்ற யுத்தத்தினால் முற்றாக சேதமடைந்துள்ளது அதனை புதிதாக அமைப்பதற்காக எதிர்வரும் 05.07.2017 புதன்கிழமை காலை 9 மணியளவில் அடிக்கல் நாட்டு இடம்பெறும். எம்பெருமான் அடியார் பெருமக்களே இக்கட்டுமானப்பணிக்கு தங்களான நிதியுதவிகளை வழங்குமாறு மிகவும் பணிவன்புடன் வேண்டிநிற்கின்றோம். தகவல்:- நிர்வாகம் Last Updated (Tuesday, 04 July 2017 03:35) |
அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலய வருடாந்த உற்சவம் சிறப்புற நடைபெறவுள்ளது.நாகர்கோவில் வடக்கு அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலயத்தில் வருடாந்த மணவாழக்கோல திருவிழா எதிர்வரும் 06.07.2017 மிகவும் சிறப்புற நடைபெறவிருக்கின்றது. இசைக்கச்சேரி, நாதஸ்வரக்கச்சேரி, வில்லிசை போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறவிருக்கின்றது. Last Updated (Tuesday, 04 July 2017 07:35)
பூர்வீக நாகதம்பிரான் ஆலய 2017ம் ஆண்டு தீர்த்தோற்சவம் பற்றிய கலந்துரையாடல்.நாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலய வருடாந்த உற்சவமான 10ம் நாள் தீர்த்தோற்சவம் தொடர்பான கலந்துரையாடல் எதிர்வரும் 02.07.2017 ஞாயிற்றுக்கிழமை பி.ப. 2.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணிவரையில் லண்டன் கனகதுர்க்கை அம்மன் ஆலய மண்டபத்தில் நடைபெறவுள்ளது என்பதனை அறியத்தருகின்றோம். Last Updated (Monday, 26 June 2017 10:50)
|
- அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலய விஷேட பொதுக்கூட்டம் 29.06.2017 வியாழக்கிழமை பிற்போடப்பட்டுள்ளது.
- நாகர்கோவில் கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் இன்று ஆரம்பம்.
- நாகர்கோவில் வடக்கு முருகையா ஆலய எழுந்தருளி விக்கிரகம் செய்வதற்கு நிதியுதவி செய்ய முன்வந்துள்ளோர் விபரம்
- நாகர்கோவில் வடக்கு முருகையாவின் மெய்யடியார்களுக்கு முக்கிய அறிவித்தல்!