அறிவிப்பு
நாகர்கோவில் கிராமத்திற்கு வீதி விளக்குகளை பொருத்தி ஒளியூட்டிய நாகர்கோவில் மக்கள் ஒன்றியம்.நாகர்கோவில் வடக்கு கிராம வீதிகளுக்கு புலம்பெயர்ந்து நாட்டில் வாழும் மக்கள் ஒன்றிய உறுப்பினர்களால் நாகர்கோவில் மக்கள் ஒன்றியத்தின் உதவியுடன் எமது கிராமத்திற்கு வீதி விளக்குகள் 31.08.2015 திங்கட்கிழமை இன்று பொருத்தப்பட்டுள்ளது.
|
அருள்மிகு முருகையா தேவஸ்தான கும்பாபிஷேகத்திற்கு நிதி வழங்கியோர் பெயர் விபரங்கள்.நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தான மகா கும்பாபிஷேக பெருவிழா எதிர்வரும் 09.09.2015 அன்று நடைபெறவுள்ளதால் அடியவர்களிடம் நிதியுதவி வழங்குமாறு விடுக்கப்பட்ட செய்திகளுக்கு அமைவாக புலம்பெயர் அடியவர்களால் நிதி பங்களிப்பு வழங்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது. அவர்களின் பெயர்விபரங்கள் இணைக்கப்பட்டுள்ளது. எனவே எம்பெருமான் அடியவர்களே அனைவரும் இக்கைங்கரியத்திற்கு நிதிப்பங்களிப்பினை வழங்கி முருகப்பெருமானின் கும்பாபிஷேக விழாவினை சிறப்பித்து நல்லருளினை பெற்றேகும் வண்ணம் வேண்டுகின்றனர். மேலும் Last Updated (Sunday, 23 August 2015 04:05) அருள்மிகு முருகையா தேவஸ்தான மகாகும்பாபிஷேகத்திற்கு புலம்பெயர் அடியார்களிடம் நிதிகோரல்..நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தான மகாகும்பாபிஷேகத்திற்கு பெருமளவு நிதி தேவைப்படுவதனால் புலம்பெயர் அடியார் பெருமக்களிடம் இருந்து இப்புனிதப்பணிக்கு நிதியுதவி வேண்டி நிற்கின்றனர். முருகப்பெருமான் மெய்யடியார்களே தங்களால் இயன்ற நிதியுதவி வழங்கி எம்பெருமானின் பேரருளினை பெற்றேகுமாறு வேண்டுகின்றனர்.....மேலும் Last Updated (Sunday, 09 August 2015 03:50) |
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தான மண்டலாபிஷேக பூஜையில் அடியவர்கள் பங்கேற்குமாறு அழைப்பு......!நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தான மண்டலாபிஷேகப் பூஜையில் பங்கேற்க விரும்பும் எம்பெருமான் அடியார்கள், தேவஸ்தான நிர்வாக சபையினருடனோ அல்லது சர்வதேச நிதி சேகரிப்பு பொறுப்பாளருடனோ தொடர்பு கொண்டு தங்களது பெயர்களை பதிவு செய்யுமாறு பணிவன்புடன் வேண்டிக் கொள்கின்றோம். Last Updated (Tuesday, 04 August 2015 01:08) நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தான மகாகும்பாபிஷேக அறிவித்தல்.
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தான மஹா கும்பாபிஷேகப் பெருவிழா குறிப்பிட்டுள்ளதன் பிரகாரம் எதிர்வரும் 09-09-2015 புதன்கிழமை நடைபெறவுள்ளது என்பதை அடியார் பெருமக்களுக்கு அறியத்தருகின்றோம்.
Last Updated (Tuesday, 04 August 2015 01:01) |
- பூர்வீக நாகதம்பிரான் ஆலயத்தில் 19.07.2015 அன்று பிரதேச செயலர் தலைமையில் நடைபெற்ற விசேட பொதுக்கூட்டத்தின் விபரங்கள்.
- test
- TR-163 வழக்கின் தீர்ப்பினை மறைத்து வாபஸ் பெற்றதாக பொய்யினை கூறும் பூர்வீக நாகதம்பிரான் ஆலய நம்பிக்கை பொறுப்பாளி.
- கடந்த யுத்தத்தினால் மரணமான நாகர்கோவில் ம.வி. மாணவர்களின் நினைவு ஸ்தூபிக்கான அடிக்கல் நாட்டப்பட்டது.