மரண அறிவித்தல்: கண்மதி இராசகோபால் 07.02.2017 இன்று தெல்லிப்பளை வைத்தியசாலையில் காலமானர்.
நாகர்கோவிலை பிறப்பிடமாகவும், திருமால் புரம், கற்கோவளம், பருத்தித்துறையை வதிவிடமாகவும் கொண்ட கண்மதி இராசகோபால் 07.02.2017 செவ்வாய்க்கிழமை தெல்லிப்பளை வைத்தியசாலையில் காலமானார். புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு கடந்த சில தினங்களாக தெல்லிப்பளை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி காலமானர்.
அன்னார் குணசீலராசா அமரர் சீததேவி அவர்களின் பாசமிகு மகளும்,
காத்திகேசு துரையம்மா ஆகியோரின் அன்பு மருமகளும்,
காத்திகேசு இராசகோபால் என்பவரின் அன்பு மனைவியும்,
விதுரன், மதுரன், சிந்துஜன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
றஜனி, குருகுலம், யோகறஞ்சன், றஞ்சி, இளையராஜா, யோகவதனா, பிரிதுரி, தர்சினி ஆகியோரின் அன்பு சகோதரியும் ஆவார்
அன்னாரது இறுதிக்கிரியைகள் 08.02.2017 புதன்கிழமை காலை 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஆனைவிழுந்தான் இந்துமயானத்தில் தகனம் செய்யப்படவுள்ளது.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் எமது கிராம மக்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றனர்.
அன்னாரது பிரிவினால் துயருற்றிருக்கும் குடும்பத்தாருக்கு நாகர்மணல் இணையத்தளம் எமது கிராம மக்கள் சார்பாக ஆழ்ந்த அனுதாபத்தினை தெரிவிப்பதுடன் அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றது.
Last Updated (Tuesday, 07 February 2017 13:32)