நாகர்கோவில் கிராமத்தில் மீளக்குடியமர்ந்த மக்கள் படும் அவலம் ( படங்கள் இணைப்பு).
நாகர்கோவில் கிராமத்தில் மீளக்குடியமர்ந்தவர்கள் சொந்தமண்ணில் மீளக்குடியமர்ந்த சந்தோஷத்திற்காக பெரும் கஷ்டத்தின் மத்தியில் வாழ்வதை இணைக்கப்பட்ட படத்தில் காணலாம். ( படங்கள் இணைப்பு )
ஆலமரத்தடியில் படுத்துறங்குவதும், பனைமரத்தடியில் உணவு சமைப்பதும், குடிநீர்வசதி அன்றாடவாழ்க்கைக்கான நீர்வசதிகள் எதுவுமின்றி அல்லல்பட்டுக்கொண்டு வாழ்கின்றார்கள்.
இந்தசந்தர்ப்பத்தில் புகைப்படம் எடுப்பதற்காக கேட்டபோது அவர்களிடம் இருந்து ஒருகேள்வி கேட்க்கப்பட்டது. எதற்காக எங்களை புகைப்படம் எடுக்கிறீர்கள்?
பதில்:-புலம்பெயர்ந்த நாட்டில் வாழும் எம்கிராமத்தவர்கள் மீள்குடியேற்றத்தின்பின் உங்கள் நிலமையினை பார்வையிடுவதற்காக.
அதன்பின் அவர்கள் கூறினார்கள். புலம்பெயர்ந்தநாட்டில் வாழும் பூர்வீக நாகதம்பிரான் புகழ்வாய்ந்த நாகர்கோவில் கிராமதில் பிறந்தவர்கள் எம்கிராமத்தில் பற்றும் அக்கறையும் கொண்டவர்களிடம் கூறுங்கள். எமதுகிராமத்தை மேம்படுத்தவும் எமதுகிராமத்தில் மீள்குடியேறி அல்லல்படும் குடும்பங்களுக்கும் தங்களால் ஆன உதவிகளைசெய்துகொள்ளும்மாறும், அவ்வுதவிகள் சரியானநேரத்தில் எல்லாமக்களுக்கும் சமமானவழியில் நடப்பவர்கள்மூலமாகவோ அல்லது ஒரு குழுவைக்கொண்டோ இல்லாவிடில் கிராமத்தில் அக்கறைகொண்டவர்கள் மூலமாகவோ எமக்கு உதவிகள் செய்யும்வண்ணம் கேட்டுக்கொள்கின்றோம் என்றார்கள்.
உண்மையிலேயே இம்மக்கள் படும் அவலத்தினை நாம் எழுதுவதைவிட நீங்கள் புகைப்படத்தில் காணக்கூடியதாக புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளது. அல்லல்படும் மக்களுக்கான உதவிகளை செய்வதற்காக நாகர்கோவில் நாகர்மணல்.கொம் என்றென்றும் பாடுபடும்.
(பணியைசெய்யும் பலனைஎதிர்பாராது>>>nakarmanal.com)