அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் நடைபெற்ற சூரன்போர்
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் கந்தசஷ்டி விழாவின் இறுதி நிகழ்வாகிய சூரன்போர் நிகழ்வு அடியார்களால் மிகவும் சிறப்பானமுறையில் கொண்டாடப்பட்டது. முருகப்பெருமான் போர்க்குதிரையில் புறப்பட்டு சூரனை கொன்று அமரர்களுக்கு விடுதலை கொடுத்தும் இவ்விரதத்தினை அனுஷ்டித்த அடியவர்களுக்கும் அருள்பாலித்தருளிய காட்சி காண்போர்களை மெய்சிலிர்க வைத்துள்ளது. புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது.