21.07.2011 இன்று நாகர்கோவில் மக்கள் மீளக்குடியேற்றி வைக்கப்பட்டுள்ளன.
யாழ்மாவட்ட படைஅதிகாரி மேஜர் சத்துருதுங்க அவர்களுடன் மேலும் பல இராணுவவீரர்கள், வடமராட்ச்சி கிழக்கு உதவி அரசாங்க அதிபர், மற்றும் அரச ஊளியர்கள் வருகைதந்துள்ளார்கள் அவர்களை எமதுகிராம மக்கள் மலர்மாலை சூட்டி அம்பன் பாடசாலை மாணவர்களின் பாண்ட் வாத்திய அணிவகுப்புக்களுடன் வரவேற்று நாகதம்பிரான் ஆலயத்தின் மருதமர நிழலில் அமைக்கப்பட்ட தகரப்பந்தலில் அமர்த்தி கெளரவிக்கபட்டனர். அதன் பின்னர் இராணுவ அதிகாரி எமதுமக்களுக்கு கூறியது என்னவென்றால்? இன்று உங்கள் கைகளில் நாகர்கோவில் மேற்கும், தெற்கும் எம்மால் உங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது ஆகவே நீங்கள் இன்றுதொடக்கம் எந்தவித அனுமதியுமின்றி இக்கிராமத்தில் மீளக்குடியேறலாம் என்றுகூறி ஓரிரு குடும்பங்களுக்கு மண்ணெண்ணை விளக்கும், சிறியபொதியும் கொடுத்து அவர்களை அனுப்பிவைத்துள்ளார்.
அதனைத்தொடர்ந்து நாகர்கோவில் மகாவித்தியாலயத்திற்குள் சுமார் 60 அடி நீள்முடைய ஒரு கொட்டில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளது ஆனல் அவற்றின் கூரை வேயவில்லை. அதற்கான உபகரணக் கொடுக்கப்பட்டுள்ளது படத்தில் காணலாம். ஒருசில கிணறுகள் நீர் இறைக்கும் இயந்திரங்களால் நீர் இறைத்துக்கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பிடத்தக்கது.
.