பள்ளிக்கூட வைரவர் ஆலயத்திற்கு மணிக்கோபுரம் புதிதாக அமைத்து 10.02.2016 அன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.
நாகர்கோவில் வடக்கு பள்ளிக்கூட வைரவர் ஆலயத்திற்கு புதிதாக மணிக்கோபுரம் ஒன்றினை அமைத்து கடந்த 10.02.2016 புதன்கிழமை அன்று மணிக்கோபுரத்திற்கான கும்பாபிஷேகத்தினையும் சிறப்பான முறையில் நடைபெற்றது. புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளது
அத்துடன் தற்போது ஆலய உண்டியலில் சேர்ந்த பணத்தினை ஒன்று திரட்டி களஞ்சியம் மற்றும் பாகசாலை (மடப்பளி) ஆகிய கட்டடத்தினை அமைத்துள்ளனர் ஆனால் தற்போது அதற்கான கூரைவேலையினை செய்துகொள்வதற்கு போதுமான நிதியின்மையினால் பூர்த்தியாகாத நிலையில் உள்ளது எனவே அடியவர்கள் தங்களால் இயன்ற சிறுதொகை பணத்தினை வழங்கி இக்கடடத்தினை நிவர்த்தி செய்து தருமாறு மிகவும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றார்.
தகவல்:- மயில்வாகனம், (ஆலய பூஜகரும், நம்பிக்கை பொறுப்பாளரும்.)
தொலைபேசி இலக்கம் 0099777684887