மரண அறிவித்தல்:- அருளப்பு இராசப்பு 09.12.2015 அன்று காலமானார்.
நாகர்கோவில் வடக்கை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அருளப்பு இராசப்பு 09.12.2015 புதன்கிழமை இன்று அவரது இல்லத்தில் காலமானார்.
அமரர் பெளலம்மா இராசப்பு என்பவரின் அன்புக்கணவரும்
ஞானப்பிரகாசம், பிரான்சிஸ்கா,மரியநாயகி ஆகியோரின் பாசமிகு தந்தையுமாவர்.
அன்னாரது இறுதிக்கிரியைகள் 10.12.2015 வியாழக்கிழமை 3:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் புனித சவேரியார் தேவாலயத்தில் இறுதி அஞ்சலி நடைபெற்று பின்னர் கிறிஸ்தவ மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் எமது கிராமத்து மக்கள் அனைவருக்கும் அறிவிக்கின்றனர்.
அன்னாரது பிரிவினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு நாகர்கோவில் மக்கள் சார்பாக நாகர்மணல்.கொம் ஆழ்ந்த அனுதாபத்தினை தெரிவிப்பதுடன். அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றது.