Website TemplatesJoomla TemplatesWeb Hosting
Home புலவியோடை நாகதம்பிரான் ஆலயம் அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலய சங்காபிஷேகமும், கும்பாபிஷேக சிறப்பு மலர் வெளியீடும்
We have 32 guests online
Pulaviodai
Murukaiya



Visitors Counter
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday66
mod_vvisit_counterYesterday96
mod_vvisit_counterThis week363
mod_vvisit_counterThis month2672
mod_vvisit_counterAll761964
Live User

அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலய சங்காபிஷேகமும், கும்பாபிஷேக சிறப்பு மலர் வெளியீடும்

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலயம் கடந்த 29.06.2015 அன்று கும்பாபிஷேகம் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்று தொடர்ந்து 45 நாட்கள் மண்டலாபிஷேகம் நடைபெற்று அதனைத்தொடர்ந்து 12.08.2015 புதன்கிழமை அன்று 1008 சங்குகளைக்கொண்ட சங்காபிஷேகமும், கும்பாபிஷேக சிறப்புமலர் வெளியீட்டு விழாவும் நடைபெறவுள்ளது.

 

காலை 7:00 மணியளவில் கிரியைகள் ஆரம்பமாகி நண்பகல் 12:00 மணியளவில் விசேட பூஜை ஆராதனைகள் நடைபெற்று அடியவர்களுக்கு அன்னாதானம் வழங்கப்படும். அதனைத்தொடர்ந்து சுமார் 2:30 மணியளவில் கும்பாபிஷேக சிறப்புமலர் வெளியீட்டு நிகழ்வு ஆரம்பமாகவுள்ளது. இந்நிகழ்விற்கு பல கல்விமான்களும், சிவதொண்டர்களும் கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.
அதனைத்தொடர்ந்து மாலை சுமார் 5:00 மணியளவில் நாகேஸ்வரப்பெருமானுக்கு அலங்கார பூஜை நடைபெற்று எம்பெருமான் எழுந்தருளி உள்வீதியுலா வலம்வந்து மின்குமிழ்களால் அலங்கரிக்கப்பட்ட சப்பறத்தில் வெளிவீதியுலா வலம்வந்து அடியவர்களுக்கு அருள்பாலித்தருள்வார். எம்பெருமான் மெய்யடியார்களே அனைவரும் ஆசாரசீலர்களாக வருகைதந்து எம்பெருமானின் பேரருளினை பெற்றேகுமாறு வேண்டுகின்றோம்.

 

 
MiniCalendar
March 2024
MTWTFSS
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Poll
புதிய இணையம் பற்றி?
 
Time Clock
Gallery