யா/நாகர்கோவில் மகாவித்தியாலயத்தில் 5 மாணவர்கள் க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் சித்தியடைந்துள்ளார்கள்.
யா/நாகர்கோவில் மகாவித்தியாலயத்தில் 2014ம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த. சாதாரணதரப் பரீட்சையில் 10 மாணவர்கள் தோற்றுவித்துள்ளார்கள் அவற்றில் 5 மாணவர்கள் உயர்கல்வி பயில்வதற்கான பெறுபேறுகளை பெற்றுள்ளார்கள். தேர்ச்சிபெற்ற மாணவர்களின் பெயர் விபரங்கள்.
பெயர் | புள்ளிகள் |
B.ரனிஸ்ரலா | 3-A, 4-B, C.S |
T.கெளசிகா | 2-A, 3-B, 2-C, 2-S |
S.ஹரிதாஸ் | 2-A, 3-C, 2-S |
S.நிறஞ்சனா | A, 3-C, 2-S |
P.சிந்துஜா | A, 2-C, 3-S |
இவர்களுடன் எமதுகிராமத்து மாணவி பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் பாடசாலையில் கல்வி பயின்றுவரும் செல்வி சங்கீதா ஆனந்தமூர்த்தி 8-A, C பெறுபேற்றுக்களையும் பெற்றுள்ளார்.
இம்மாணவர்களை நாகர்கோவில் மக்கள் பாராட்டி இவர்களது கல்வி மென்மேலும் வளர்ந்து மேற்கொண்டு கல்விமான்களாகி எமது கிராமத்திற்கு பெருமையினை ஈட்டித்தரவேண்டுமென்று இறைவனை பிராத்திக்கின்றனர்.