திருமதி அன்னபூரணம் நாகதம்பி அவர்களினால் கணனி வளாகம் திறந்து வைக்கப்பட்டது.
பருத்தித்துறை மாநகரில் சிவன்கோவிலுக்கு அருகாமையில் 26.01.2015 இன்று திங்கட்கிழமை நண்பகல் 12:45 மணியளவில் கவிச் ஐரி வளாகம் கோலாகலமான திறப்புவிழா நடைபெற்றது.
இக்கணனி வளாகம் நாகர்கோவில் வடக்கைச்சேர்ந்த தலைமுறைப்பெரியார் திருமதி அன்னபூரணம் நாகதம்பி அவர்களினால் மிகமனமகிழ்வுடனும், இறைபக்தியுடனும் மிகவும் உணர்வுபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது. பின்னர் உரிமையாளர்களை ஆசீர்வதித்து வையகத்தில் வாழ்வாங்கு வாழவேண்டும் என்று வாழ்த்தினார்.