பூர்வீக நாகதம்பிரான் ஆலய 7ம் நாள் கப்பல்திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
நாகர்கோவில் பூர்வீகநாகதம்பிரான் ஆலயம் வருடாந்த அலங்கார உற்சவ 7ம் நாள் கப்பல் திருவிழா 09.10.2014 வியாழக்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இரவு நிகழ்ச்சிகளாக நாதஸ்வரக்குழுவினரின் வாத்தியகானம் அதனைத்தொடர்ந்து சப்தஸ்வரா இசைகான மழை அதனைத்தொடர்ந்து நாகேஸ்வரப்பெருமான் அதிகாலை 3 மணியளவில் வெளிவீதி உலாவந்து அங்கே வடக்கு வீதியில் அமைக்கப்பட்ட ஆசனத்தில் அமர்த்தி எமையெல்லாம் ஆங்கிலேயரிடமிருந்து சிறைமீட்ட வரலாறாகிய கப்பல் விழா வரலாறு அடியவர்களினால் நிகழ்த்திகாட்டப்பட்டது சிறப்பம்சமாகும்.புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது