பூர்வீகநாகதம்பிரான் ஆலய வருடாந்த உற்சவம் தொடர்பாக நாகர்கோவில் வடக்கு மக்களின் ஒன்றுகூடல் நடைபெற்றது.
நாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் (2014) இவ்வாண்டிற்கான 10ம் நாள் தீர்த்தத்திருவிழா முன்னேற்பாடாக 19.09.2014 வெள்ளிக்கிழமை இன்று காலை 11:00 மணியளவில் முருகன் கோவில் அரசமர நிழலில் வடக்கு மக்களின் ஒன்றுகூடல் இடம்பெற்றது.
திருவிழா நடார்த்துவதற்காக நிதி சேகரிப்பது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது சென்றவருடம் போன்று இந்தவருடமும் விழாவினை சிறப்பாக நடார்த்துவதற்காக விழாக்குழு தெரிவுசெய்யப்பட்டுள்ளது அவற்றில் கடந்தவருட பொருளாளராக பணியாற்றிய சிவாபாதசுந்தரம் சிவநேசன் அவர்களே 2014ம் ஆண்டிற்கான பொருளாளராக மீண்டும் தெரிவுசெய்யப்பட்டுள்ளது இவருடன் இணைந்து 15 பேர்கொண்ட குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது.